Tuesday, October 11, 2016

மது வீட்டுக்கொலு வழி திருவாரூர்


ஒவ்வொருத்தருக்கும் கொலுவில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். பலருக்கும் சுண்டல். எனக்கு கதைகளும் பாடல்களும். மதுசூதனன் கலைச்செல்வன் என்னை அன்புடன் அவர் வீட்டுக்கொலுவுக்கு அழைத்தபோது நான் மிகவும் ஆவல் கொண்டேன். மது பாரம்பரியமான விஷயங்களில் கொள்ளும் சிறந்த ஈடுபாடு என்னை அவர் வீட்டுக்கொலுவை ஆவலுடன் எதிர்கொள்ள வைத்தது.

மது எனக்கு முதலில் அறிமுகமானது, அவர் ஸ்ரீரங்கத்து அரையர் சேவை பற்றி ஆற்றிய சிறிய, ஆனால் பேரார்வமும் பேருணர்வும் ததும்பும்  உரை. இவரது சிறந்த ஆளுமை அந்த சிறிய உரையிலேயே மிகவும் பிரகாசித்தது.

அதற்குப்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்   ஆர் கே அரங்கில் அவர், பத்மா சுகவனம் பாடல்களுடன்  ஆற்றிய ' கலியன் கண்ட கண்ணபுரம்' உரை நான் என்றென்றும் கேட்டு களிக்கும் ஒரு உரையாக அமைந்தது. எனவே அவரது வீட்டில் அவர்கள் அமைத்துள்ள கொலுவை கண்டு களிக்க பேராவல் கொண்டேன்.

மது இவ்வருடம், அவர் வீட்டுக் கொலுவில் திருவாரூர் பற்றிய அம்சங்களை சிறப்புப் பொருளாக அமைத்திருந்தார். கொலுவில் பொம்மைகள் வைப்பதோடு நில்லாமல் அவை கூறும் கதைகள் கூறக் கேட்பது அலாதி இன்பம் . அவ்வழி நான் மதுவினிடத்து கொலுவின் வழி திருவாரூர் பற்றி அறிந்து கொண்ட விஷயங்களை இங்கே பகிர்கிறேன்.

திருவாரூர் ஒரு திருவிடங்க ஸ்தலம். முதலில் விடங்கம் என்பதின் பொருள் என்ன என்ற ஐயம் மதுவிடம் தெரிவித்தேன் , அதில் தொடங்கியது ஒரு நெடும் அழகிய பயணம் திருவாரூரை சூழ்ந்த சிறப்புகளின் வழி.


முதலில் 'டங்' என்பது உளியினால் ஏற்படும் சத்தத்தை குறிக்கும். திருவாரூர் தியாகேசர் உருவம் உளியால் செதுக்கப்பட்டதன்று என்பதை குறிக்கும் வகையில் அவரை விடங்கர் என்று அழைக்கின்றனர். ஆம் இவர் மனதால் நிர்மாணிக்கப்பட்டவர். விஷ்ணு இவரை தன் மார்போடு அணைத்தபடி பூஜித்து வந்துள்ளார். இதனாலே இவர் பல்லக்கு உற்சவத்தின்  போது மேலும் கீழுமாக அசைத்தபடி ஆராதிக்கப் படுகிறார். இதை அஜபா நடனம் என்று அழைக்கின்றனர். இந்த முறை தியாகேசர் வழிபடப் படும் அணைத்து ஸ்தலங்களிலும் பின்பற்றப்படுகிறது .
விஷ்ணுவிடம் இருந்து இந்திரன் வாங்கி பூஜித்து வருகிறான். இந்திரனுக்கு ஒரு சோதனையின் போது  முசுகுந்த சோழன் ( இவன் முகம் குரங்கு வடிவானது ) உதவுகிறான். சோழன் தியாகேசரை கேட்கிறான் இந்திரனிடத்து. தியாகேசரை பிரிய மனமில்லாத இந்திரன் , அந்த சிலை போலவே 6 சிலைகளை உருவாக்கச் செய்கிறான். முசுகுந்தரின் பக்தியை சோதிக்கும் வழியில் விடங்கரை கண்டு எடுத்துக்கொள்ளும் படி கூறுகிறான்.
சோழன் விடங்கரை சரியாக கண்டு கொண்டதை மெச்சி அணைத்து சிலைகளையும் அவனுக்கே பரிசளிக்கிறான். இவ்வாறாக விடங்கர் திருவாரூருக்கும் பிற சிலைகள் அதை சுற்றி ஆறு கோயில்களிலும் நிர்மாணிக்கப் படுகின்றன. இவை முறையே சப்த விடங்க ஸ்தலங்கள் என அழைக்கப்படுகின்றன, அவை - திருவாரூர் , நாகை காரோணம் , திருக்கோளிலி , திருநள்ளாறு , திருக்காரையில் , திருவாய்மூர் மற்றும் திருமறைக்காடு.

தியாகராஜர் இந்த ஸ்தலங்களில் சோமாஸ்கந்தர் ஆக காட்சி அளிக்கிறார் . நமக்கு சாதாரணமாக முகங்கள் மட்டுமே தெரியும். உருவம் முற்றிலும் தெரியாதவாறு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் .

தியாகராஜரை பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம், இனி இக்கோயிலுக்கு சிறப்பு சேர்க்கும் அடியார்களைப் பற்றி காண்போம் . முசுகுந்தன் வழியில் வந்த மனுநீதி சோழனிடத்து பசு நீதிகேட்டது இவ்விடமே .அக்குலத்தில் பின் தோன்றிய, ராஜேந்திரசோழன் தனக்கு அணுக்கமான பரவை நாச்சியாருடன் இங்கு நின்று வழிப்பட்ட இடத்தில் இரு விளக்குகள் ஏற்றி வைக்க கட்டளைப்  பிறப்பித்துள்ளான் .


சமணர்கள் இந்த கோயிலைச்  சுற்றி வாழ்ந்து வந்துள்ளனர். அப்படி சமணத்தில் இருந்து சைவத்திற்கு மாறிய நமி நந்திஅடிகள் தண்ணீர் கொண்டு விளக்கேற்றிய சிறப்புடையது இத்தலம்.

சமணர்கள் இக்கோயிலின் குளத்தை மணல் கொண்டு மூட முற்பட, அதை எதிர்த்து, பார்வையற்ற தண்டியடிகள் அந்த குளத்தை மணல் தூற்றி காத்த தலம் இதுவே.

இந்த கமலாலயத்தின்  கரையில் தான் சுந்தரர் மணிமுத்தாறில் பொன்னை விட்டு இங்கு வந்து எடுக்கிறார், அந்த பொன்னை  சோதித்து தரும் படி கணபதியிடம் வேண்டுகிறார்.  சுந்தரர் திருத்தொண்டர் தொகை பாடி அருளியதும் , சுந்தரருக்காக பெருமான் பரவை நாச்சியாரிடம் தூது சென்றதும் இத்தலமே .
திருவாரூர் பிறந்தோரெல்லாம் அடியேன் என்று சிறப்பு பெற்றது இத்தலம் .

இக்கோயிலின் ஆழிதேரழகை அப்பரும் சம்பந்தரும் ஏழாம் நூற்றாண்டிலேயே சிறப்பாக பாடியுள்ளது இக்கோயிலின் நீண்ட சிறப்புக்கு சாட்சியாகும்.

திருநீலகண்ட யாழ்ப்பாணருக்காக பெருமான் தனியே ஒரு வாசல் அமைத்து வருவித்தது மேலும் சிறப்பு .

பலவித கணபதி இங்கே வழிபடப் படுகின்றது . வாதாபி கணபதி இங்கு தான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வல்லப கணபதி, உச்சிஷ்ட கணபதி பஞ்சமுக கணபதி என்ற வழிபாடுகளும் இங்கே உண்டு.

சிதம்பரம் கோயிலுக்கும் இக்கோயிலுக்கு பல சிறப்புகள் ஒருபோல அமைந்துள்ளதை காணலாம். தில்லை நடராஜர் இங்கு சில வருடங்கள் வைக்கப்பட்டிருந்ததாக ஒரு தகவலும் உண்டு.

இந்தக்கோயிலுக்கென சிறப்பான இசை வாத்தியங்கள் சில உள்ளன அவை பஞ்சமுக வாத்தியம் மற்றும் தலையில் தாங்கிய படி அடிக்கும் மேளம்.

இத்துணை சிறப்புகள் போதாதென்று கர்நாடக இசை உலகின் மும்மூர்த்திகள் பிறந்தது திருவாரூரிலே தான்.
என்று திருவாரூர் பற்றி ஒரு பரந்து விரிந்த  அழகிய கதா -சித்திரத்தை கண் முன் தீட்டி நிறுவினார் மது. எமக்கும் இந்த நவராத்திரியில் இப்படி ஒரு அழகிய அனுபவம் வாய்த்தது மிக்க மகிழ்ச்சி. இனி நாம் அடுத்த வருடம் மது  வீட்டுக்  கொலுவின் வழி மற்றுமொரு தலத்தைப்  பற்றி அறிந்து கொள்ள ஆவலுடன் காத்திருப்போம். 

Monday, October 3, 2016

ஆய்ச்சியர் குரவை

ஆய்ச்சியர் குரவை

நான் பொதுவாகவே இலக்கியங்கள் மேடையில் படைக்கப்படும் போது மிகவும் பரவசப்படுபவன் . அப்படியிருக்க மயிலை ஆர் கே ஹாலில் ஆய்ச்சியர் குரவை lec -dem வழங்குகிறார்கள், அதுவும் ஒரு ஒய்வு பெற்ற இயர்ப்பியல் பேராசிரியர் முனைப்பில் நிகழ்கிறது என்று அறிந்த உடன் மிக்க ஆர்வம் கொண்டேன். இருந்தும் இது சிலம்பில் வரும் ஆய்ச்சியர் குரவை தானே இன்று ஒரு சிறு ஐயம் மிஞ்சியிருந்தது. அரங்கில் நுழைந்தவுடனேயே ஆம் இது சிலம்பின் ஆய்ச்சியர் குரவை தான் என்று பேராசிரியர் ரங்கராஜன் அவர்களிடம் கேட்டு தெளிந்த பின் ஒரு பரம திருப்த்தி. இந்த முயற்சிக்கே அவர்களுக்கு கோடி வணக்கங்கள் சொல்ல வேண்டும்.

இது போதாதென்று குரவையை நமக்கு பாடி அளிக்க இருந்த கலைஞர் மிகவும் அறிமுகமான முகமாக தெரிந்தது, பின் கேட்டு தெளிந்ததில் அவர் நான் பெரிதும் மதிக்கும் கலைஞர் , மக்கள் தொலைக்காட்சியில் நான் பல இடையூருகளுக்கு நடுவே கேட்டு மகிழ்ந்த தேவாரங்களை பாடி வழங்கிய செல்வி கீர்த்தனா. அவரது அருமையான கீர்த்தனைகளை இன்று நேரில் வழங்க கேட்பது ஒரு பெரும் பாக்கியமாக அமைந்தது.

திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!-
கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று, இவ்
அம் கண் உலகு அளித்தலான்.
ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!-
காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு 
மேரு வலம் திரிதலான்.
மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!-
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல்,
மேல நின்று தான் சுரத்தலான்.
பூம் புகார் போற்றுதும்! பூம் புகார் போற்றுதும்!
வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு
ஓங்கிப் பரந்து ஒழுகலான்.

(texts from tamilvu.org )

 என்ற சிலம்பின் மங்கல  வாழ்த்துப் பாடலை பாட கேட்டதுமே பெரும் அற்புதமாக அமைந்தது. வாழ்த்துப்பாடலை தொடர்ந்து பேராசிரியர் ரங்கராஜன் ஆங்கிலத்திலும் , அவரது துணைவியார் பேராசிரியர் விஜயலக்ஷ்மி ( இவர் oxford இல் இந்தியவியல் துறையில் பயின்றுள்ளார்) தமிழிலும் சிலம்பில் ஆய்ச்சியர் குரவையின் இடத்தையும் சிறப்புக்களையும் விளக்கினர்.

இந்த விளக்கங்கள் கருத்தளவில் சிறப்பாக அமைந்தாலும் இன்னும் கூடுதல் அழகாக ஒரு கலாக்ஷேபம் முறையில் அமைந்திருந்தது  இன்னும் சிறப்பாக வழங்கியிருக்கலாம் என்று தோன்றியது. விவரணைகள் ஒரு தட்டையான தகவல்கள் அளிக்கும் விதமாக மட்டும்மல்லாமல் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம் .

ஆனால் இந்த சிறு சறுக்கலை மிக அருமையாக உயர்த்தி நிறுத்தியது இளங்கோவின் தமிழும் செல்வி கீர்த்தனா அவற்றை இசையுடனும்,  ( பாடல்களை அவற்றின் பொருள் மற்றும் திணைக்கேற்ப இசை அமைத்து தந்தது இன்னொரு மக்கள் tv புகழ் வைத்தியலிங்கம் ஐயா என்று பிறகு கேட்டறிந்தேன், இதை தொகுத்து வழங்கியவர்கள் கூற மறந்து இன்னொரு சிறு ஏமாற்றம்.) உணர்வுப் பெருக்குடனும்  வழங்கிய விதம் எம் நெஞ்சை அள்ளியது.


சிலம்பில் ஆய்ச்சியர் குரவை அரங்கேறுவது மதுரை காண்டத்தில். கண்ணகியின் சிலம்பை விற்று பொன்செய்ய கோவலன் நகர் சென்றுள்ளான், கண்ணகி அவன் வரவை எதிர்நோக்கி கவலையுடன் அமர்ந்துள்ளாள் . அப்பொழுது மாதரி காதில் கேட்கிறது பாண்டியனின் முரசு சத்தம். வெறும் பாண்டியன் னு சொல்லி போக முடியுமா.. அவன் மெய்க்கீர்த்தி ரெண்ட கூட சேர்த்து சொல்ல வேண்டும்.. அது  இமயத்தில் மீன் கொடி நட்ட பாண்டியன்னு படுறார் இளஙகோ

கயல் எழுதிய இமய நெற்றியின் 
அயல் எழுதிய புலியும் வில்லும் 
நாவல் அம் தண் பொழில் மன்னர் 
ஏவல் கேட்ப, பார் அரசு ஆண்ட 
மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலில் 
காலை முரசம் கனை குரல் இயம்பும்; ஆகலின், 
நெய்ம் முறை நமக்கு இன்று ஆம்’ என்று, 

 இந்த பாடல் இன்ன ராகம் என்று கண்டு கொள்ளும் அளவுக்கு எனக்கு விஷயம் தெரியவில்லை, ஆனால் இது கர்ணன் படம் ' என் உயிர் தோழி ' பாடல் மெட்டில் அமைந்திருந்தது என்பது கூடுதல் செய்தி . இளங்கோவின் பாடல்களுக்கு அவற்றின் சூழல் மற்றும் பொருளுக்கு ஏற்ப மிக்க பொருத்தமான இசை அமைத்திருந்தது நெஞ்சை அள்ளியது, இங்கே குறிப்பிட வேண்டும்.

பாண்டியன் முரசு ஒலி  கேட்டதும் தான் மாதிரிக்கு இன்று அரண்மனைக்கு நெய் வழங்கும் முறை தனது என்பது நினைவு வருகிறது. உடன் தன மகள் அய்யை ஐ கூப்பிட்டு ஆவண செய்ய ஏவுகிறாள். 

அப்பொழுது அவளுக்கு பல தீய சகுனங்கள் தெரிகின்றன. பால் உரையவில்லை , நெய் உருகவில்லை , ஆ இனங்கள் சோர்ந்து காணப்படுகின்றன , எருதின் கண்களில் நீர் வழிகிறது.. இவை அனைத்தும் கண்ட மாதரி எதோ தீங்கு விளைவதுண்டு என்று திண்ணம் கொள்கிறாள். 

குடப் பால் உறையா; குவி இமில் ஏற்றின் 
மடக் கண் நீர் சோரும்; வருவது ஒன்று உண்டு! 
உறி நறு வெண்ணெய் உருகா; உருகும் 
மறி, தெறித்து ஆடா; வருவது ஒன்று உண்டு! 
நால் முலை ஆயம் நடுங்குபு நின்று இரங்கும்; 
மால் மணி வீழும்; வருவது ஒன்று உண்டு!


தன  மகளை அழைத்து கவலை கொள்ள வேண்டாம், தங்கள் விருந்தினர் கண்ணகி காணும் வண்ணமும், சோர்ந்திருந்த  ஆ இனங்கள் மகிழும் வண்ணமும் ,( என்னே ஒரு மனிதம் ) முன்பு கண்ணன், பலராமனுடனும் நப்பின்னை உடனும் ஆடிய குரவை கூத்தை ஆடுங்கள் என்று தன் ஆவலை கூறுகிறாள் . 

வருவது ஓர் துன்பம் உண்டு’ என, 
மகளை நோக்கி, ‘மனம் மயங்காதே! 
மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய 
கண்ணகியும்-தான் காண, 
ஆயர் பாடியில், எரு மன்றத்து, 
மாயவனுடன் தம்முன் ஆடிய 
வால சரிதை நாடகங்களில், 
வேல் நெடுங் கண் பிஞ்ஞையோடு ஆடிய 
குரவை ஆடுதும் யாம்’ என்றாள்- 
‘கறவை, கன்று, துயர் நீங்குக எனவே,’


ஆயர் மகளிரின்  கைப்பற்ற, ஆடவர் அவர்கள் வளர்த்த காளையை அடக்க வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. அந்த வழக்கை எடுத்தாண்டு ஏழு ஆயர் மகளிரை கொளு அமைக்கிறார் இளங்கோ. இம்மகளிரை வருணிக்கும் பேரில் அவர்கள் வளர்த்த காளையையும் இளங்கோ வருணித்து செல்கிறார் பாருங்கள் ,..


1
‘காரி கதன் அஞ்சான் பாய்ந்தானைக் காமுறும், இவ்
வேரி மலர்க் கோதையாள்; சுட்டு, 
2
நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு உரிய, இப்
பொன் தொடி மாதராள் தோள். 
3
மல்லல் மழ விடை ஊர்ந்தாற்கு உரியள், இம்
முல்லை அம் பூங் குழல்-தான். 
4
நுண் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும், இப்
பெண் கொடி மாதர்-தன் தோள்.
5
பொன் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும்: இந்
நன் கொடி மென்முலை-தான். 
6
வென்றி மழ விடை ஊர்ந்தாற்கு உரியவள், இக்
கொன்றை அம் பூங் குழலாள். 
7
தூ நிற வெள்ளை அடர்த்தாற்கு உரியள், இப்
பூவைப் புது மலராள்.


 பாவையின் வருணனையும் காளையின் வருணனையும் எப்படி ஒருங்கிணைத்திருக்கிறார் இளங்கோ என்று காண்க. இந்தப்பாடலை அழகிய காவடிச்சிந்தில் பாடி பரவசமூட்டினார் கீர்த்தனா. 

இந்த ஏழு பெண்களையும் ஒரு சீராக  நிற்க வைக்கிறாள் மாதரி . அவர்களுக்கு இந்த குரவை நிகழ்வுக்காக கோட்ப்பெயரிடுகிறாள் - 

ஆங்கு,
தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார
எழுவரிளங் கோதை யார
என்றுதன் மகளைநோக்கித்
தொன்றுபடு முறையால் நிறுத்தி
இடைமுது மகளிவர்க்குப்
படைத்துக்கோட் பெயரிடுவாள்
குடமுதல் இடமுறை யாக்குரல் துத்தம்
கைக்கிளை உழைஇளி விளரி தாரமென
விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே ;

குடமுதல், அதாவது starting from west , இடைமுறையாக -going  leftwards , we have - குரல், துத்தம்,கைக்கிளை, உழை, இளி , விளரி and தாரம். கோட்ப்பெயர் அதோடு நிற்கவில்லை , இன்னும் குரலை மாயவன் என்றாள் , வெள்ளை ஆயவன், அதாவது பலராமன் என்றாள் இளி யை , மேலும் நப்பின்னை என்றாள் துத்த நரம்பினை...

மாயவன் என்றாள் குரலை விறல்வெள்ளை
ஆயவன் என்றாள் இளிதன்னை--ஆய்மகள்
பின்னையாம் என்றாளோர் துத்தத்தை மற்றையார்
முன்னையாம் என்றாள் முறை ;

மாயவன் சீருளார் பிஞ்ஞையுந் தாரமும்
வால்வெள்ளை சீரார் உழையும் விளரியும்
கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் வலத்துளாள்
முத்தைக்கு நல்விளரி தான் ;

அவருள்,
வண்டுழாய் மாலையை மாயவன் மேலிட்டுத்
தண்டாக் குரவைதான் உள்படுவாள்--கொண்டசீர்
வையம் அளந்தான்றன் மார்பின் திருநோக்காப்
பெய்வளைக் கையாள்நம் பின்னைதா னாமென்றே
ஐயென்றா ளாயர் மகள் ;

துளசி மாலையை மாயவன் மேல் போட்டு அவர்களை குரவைக்குள் உட்படுத்துகிறாள், அச்சமயத்தில் நப்பின்னையின் அழகில் மயங்கிய திருமால் தன் மார்பில் குடியிருக்கும் திரு வை மறந்தானோ என்று வியக்கிறாளாம் மாதரி.

இனி அவர்கள் வட்டமாக நின்று, கைகோர்த்து கூத்துட்படுவதை , இளங்களோ இவ்வாறு கூறுகிறார் ..

அவர்தாம்,
செந்நிலை மண்டிலத்தாற் கற்கடகக் கைகோஓத்து
அந்நிலையே யாடற்சீ ராய்ந்துளார்--முன்னைக்
குரற்கொடி தன்கிளையை நோக்கிப் பரப்புற்ற
கொல்லைப் புனத்துக் குருந்தொசித்தாற் பாடுதும்
முல்லைத்தீம் பாணியென் றாள் ;
எனாக்,
குரன்மந்த மாக இளிசம னாக
வரன்முறையே துத்தம் வலியா--உரனிலா
மந்தம் விளரி பிடிப்பாள் அவள்நட்பின்
பின்றையைப் பாட்டெடுப் பாள் ;

 இதில் அநேக இசை விஷயங்கள் உள்ளன அவை ஆழ்ந்து நோக்க வேண்டியன. a few things i gathered were: குரலுக்கு துத்தம் இணை , இளி கிளை ஆகும் . மந்தம், பற்றி அறிய , இதை காண்க - மந்தம் முதலியன முறையே மந்தரம், மத்திமம், தாரம் எனவும், மந்தம், சமம், உச்சம் எனவும் கூறப்படும். மந்திரத்திற்கு ஐந்தாவது சமமும், அதற்கைந்தாவது வலியும், பின்னும் அதற்கைந்தாவது மந்தமுமாக வருதல் காண்க.

  மேலும் நான்காவது நரம்பு நட்பு நரம்பு எனப்படுகிறது. அதாவது விளரிக்கு துத்தம் நட்பு. 

enough of technicalities.. இனி குரவை பாடல் தொடங்குகிறது. இதில் சில பகுதியை காண்போம். முதலில் மாயவனையம் அவன் குழலோசையின் சிறப்பையும் வருணிக்கிறார்கள், 


1
கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன்
இன்று நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
கொன்றை அம் தீம் குழல் கேளாமோ, தோழீ!
2
பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன்
ஈங்கு நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
ஆம்பல் அம் தீம் குழல் கேளாமோ, தோழீ!
3
கொல்லை அம் சாரல் குருந்து ஒசித்த மாயவன்
எல்லை நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
முல்லை அம் தீம் குழல் கேளாமோ, தோழீ! 
இந்த பாடலை ஒரு அழகான தாலாட்டு போல் பாடி நம்மை ஆற்றுவித்தார்கள் . ( it sounded like the lullaby in the title track of Life of Pi)

இனி பின்னையைப் பாடுவோம்.. now the music changes track to faster paced bhajan kind of rhythm.. 

4
இறும் என் சாயல் நுடங்க நுடங்கி
அறுவை ஒளித்தான் வடிவு என்கோ யாம்?
அறுவை ஒளித்தான் அயர, அயரும்
நறு மென் சாயல் முகம் என்கோ யாம்? 
5
வஞ்சம் செய்தான் தொழுனைப் புனலுள்
நெஞ்சம் கவர்ந்தாள் நிறை என்கோ யாம்?
நெஞ்சம் கவர்ந்தாள் நிறையும் வளையும்
வஞ்சம் செய்தான் வடிவு என்கோ யாம்?
6
தையல் கலையும் வளையும் இழந்தே
கையில் ஒளித்தாள் முகம் என்கோ யாம்?
கையில் ஒளித்தாள் முகம் கண்டு அழுங்கி,
மையல் உழந்தான் வடிவு என்கோ யாம்? 
நாரதர் comes inspecting the dance formations..

1கதிர் திகிரியான் மறைத்த கடல் வண்ணன் இடத்து உளான்,
மதி புரையும் நறு மேனித் தம்முனோன் வலத்து உளாள்,
பொதி அவிழ் மலர்க் கூந்தல் பிஞ்ஞை: சீர் புறங்காப்பார்
                
முது மறை தேர் நாரதனார் முந்தை முறை நரம்பு உளர்வார்.
2
மயில் எருத்து உறழ் மேனி மாயவன் வலத்து உளாள்,
பயில் இதழ் மலர் மேனித் தம்முனோன் இடத்து உளாள்,
கயில் எருத்தம் கோட்டிய நம் பின்னை: சீர் புறங்காப்பார்
குயிலுவருள் நாரதனார் கொளை புணர் சீர் நரம்பு உளர்வார் 
இனி மாயவனை முன்னிலைப் பரவல் , (praising in second person), the famous song..

1வடவரையை மத்து ஆக்கி, வாசுகியை நாண் ஆக்கி,
கடல் வண்ணன்! பண்டு ஒரு நாள் கடல் வயிறு கலக்கினையே:
கலக்கிய கை அசோதையார் கடை கயிற்றால் கட்டுண் கை:
மலர்க் கமல உந்தியாய்! மாயமோ? மருட்கைத்தே!
2‘அறு பொருள் இவன்’ என்றே, அமரர் கணம் தொழுது ஏத்த,
உறு பசி ஒன்று இன்றியே, உலகு அடைய உண்டனையே:
உண்ட வாய் களவினான் உறி வெண்ணெய் உண்ட வாய்:
வண் துழாய் மாலையாய்! மாயமோ? மருட்கைத்தே!
3திரண்டு அமரர் தொழுது ஏத்தும் திருமால்! நின் செங் கமல
இரண்டு அடியான் மூ-உலகும் இருள் தீர நடந்தனையே;
நடந்த அடி பஞ்சவர்க்குத் தூது ஆக நடந்த அடி;
மடங்கலாய்! மாறு அட்டாய்! மாயமோ? மருட்கைத்தே! 

ஆம் என்ன  அதிசயம் , மலையை மத்தாக்கி , கடல் திரித்த கைகள் இன்று யசோதை கட்டிய கட்டுள் அடங்கிக் கிடக்கின்றன; உலகை உண்ட வாய் , வெண்ணெய் உண்கிறது, மூவுலகும் அளந்த கால்கள், பாண்டவர்க்கு தூது நடக்கின்றன !!!

மேலும் படர்க்கையில் பரவுகிறார்கள் (praising in third person) 


1மூ-உலகும் ஈர் அடியான் முறை நிரம்பாவகை முடியத்
தாவிய சேவடி சேப்ப, தம்பியொடும் கான் போந்து,
சேர அரணும் போர் மடிய, தொல் இலங்கை கட்டு அழித்த
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே?
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே?
2
பெரியவனை; மாயவனை; பேர் உலகம் எல்லாம்
விரி கமல உந்தி உடை விண்ணவனை; கண்ணும்,
திருவடியும், கையும், திரு வாயும், செய்ய
கரியவனை; காணாத கண் என்ன கண்ணே?
கண் இமைத்துக் காண்பார்-தம் கண் என்ன கண்ணே? 
3
மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை; நூற்றுவர்பால் நால் திசையும் போற்ற,
படர்ந்து ஆரணம் முழங்க, பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை; ஏத்தாத நா என்ன நாவே?
‘நாராயணா!’ என்னா நா என்ன நாவே? 

பரவி, தங்கள் துயர் நீங்கவும் மன்னன் வெற்றிக்கும் தெய்வத்திடம் வேண்டி குரவையை நிறைவு செய்கிறார்கள்..

என்றியாம்
கோத்த குரவையுள் ஏத்திய தெய்வநம்
ஆத்தலைப் பட்ட துயர்தீர்க்க வேத்தர்
மருள வைகல் வைகல் மாறட்டு
வெற்றி விளைப்பது மன்னோ கொற்றத்து
இடிப்படை வானவன் முடித்தலை யுடைத்த
தொடித்தோட் டென்னவன் கடிப்பிகு முரசே.

ரவி, தங் நிறைவாக தமிழுடன்மெல்லிய தென்றலென  பயணித்து வந்த ஸ்ருதி சங்கரின் குழலோசை கண்ணனின் குழலென மயங்க வைத்தது . தன் உள்ளம் அனைத்தும் ஒருமித்து நாட்டியம் புரிந்த மனஸ்வினிக்கும், மிருதங்க கலைஞருக்கும்  நம் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். தமிழிலும் இசையிலும் மயங்கி கிடந்ததால் நம் எண்ணம் நாட்டியத்தில் செல்லவில்லை என்பது திண்ணம். dont miss the performance here.

Sunday, October 2, 2016

AKC's docu on G

i am so passionate about watching any movie on Gandhi, that i hardly miss any and my wife wondered if there was a movie on G, i had not seen. However, this movie was like no other. This was a compilation of video footages from across the world recorded during G's lifetime and compiled as a movie in 1954 in the United States. it is a matter of pride and awe that this splendid docu was the single handed effort of a great tamil with no equal in his passion and enterprise, A.K Chettiar.

The event hosted by the Tamil Heritage Trust  had an ideal build up in Shri A. R Venkatachalapathy talking about A K Chettiyar and his exemplary efforts in putting together this documentary by travelling across the world and negotiating with so many different people in so many different ways in procuring these footages and compiling them together as a movie. 

As i was watching the 90 min long movie, i was constantly wondering if i was in awe of the personality portrayed, or the provenance that had blessed the photographers who had captured these footages or the brilliance and perseverance of AKC in compiling this masterpiece.

The docu starts off with members from different countries making their statements at a UN congregation mourning G's death. it was saddening to see Gopalsamy aiyengar, the Indian representative,  breaking down as he reads out his statement. The movie then goes on to trace G's life, with the available video and photo footages, accompanied by an engaging music in the back ground. 

it was a revelation to see the early pictures of the house Gandhi was born, in a dilapidated condition. There are not many footages from G's early life in India and in London. However there is one rare footage of a capture of a Suited G receiving and introducing Goakhale in South Africa. This is one of the most precious captures in the movie. 

And then moving on to India, the movie captures G's rise across the years and trials he faced in the process. It was also nice to see the transformation of some of the other leaders, all along. Particularly of a young and a quaint Jawaharlal, mature into the world leader he beacme; the congress babu in Subash, transfrom into the Leader in Millitary uniform; the Sarojinin Naidu glittering with pearls and Silk at the RTC into the suave Khadi clad leader of the Dandhi march and Quit India.

G's personality gradually grows upon us as the movie progresses. His great experiment in the Dandi march, he insisting on meeting and talking to villagers like one of them, His playfulness with children ( brings to mind the tooth empty smile of G and a Child on board the Ship to RTC), his rise to be the supremo of Congress ( a footage, capturing G seated alone on a higher pedastal, ideally captures this) , His travels across London and Europe (even fascist Italy) on the sidelines of RTC, the warmth with which even the English labourors affected by his movement welcomed him, his dsillusionment at RTC, his working for social upliftment from Wardha, the travelling leader, meeting people to collect money with a missionary zeal for Harijan upliftment, his negotaiations with Cripps, Jinnah and camaraderie with the Mountbattens , and finaly his penance for peace among the Hindu Muslims and his loss. 

The movie ideally projects Ahimsa as the universal message from G and goes on to substantiate that G sowed and groomed a nation that was so tuned to Ahimsa and its guiding principle that the nation gave a warm and peaceful farewell to its colonisers. 

The movie captures G's various experiments at wardha with food, technology in irrigation, paper making, livelihood for farmers, identifying alternative livelihood in spinning for farmers and women during off season. 

The movie also captures the Indian populace maturing and adopting to the principles of Ahimsa preached by G. A fotage showing group of people refusing to disperse and showing no resistance to lathi charges exemplifies the magic of G's reach on the masses. Also the rise of women participation in the national movement over the years is very well captured.

There are some fascinating captures like that of a cut out of G's larger than life image being carried to welcome his return from RTC. Its probably a sign of the birth of cut-out culture probably? And it was surprising to see charges levied on people to meet their leaders on the sidelines of Congress conclaves. 

It was touching to see casual glimpses of Ba and the towering image of Frontier G alongside G. The movie does a great job in completing the picture of the Mahathma through the bits and pieces of footages collected. The movie also doesnt fail to mention that G insisted that there was no one Truth and each had to find his own truth.

Its with great gratitude that we remember the number of camera men who had taken great efforts in capturing these footages and the himalayan efforts of AKC to compile these.

However the movie is conspicuously SIlent on Ambedkar and his role in G's life and movement. It is surprising that it fails to even mention him when he appears on the screen. Not even when it says, there were only two people's representatives at RTC, the rest rep from princely states and The Imperial govt. it sadly calls the great social conflict raised by Ambedkar as simply ' the Harijan Issue'. AKC must have had his reasons. But its our duty to question them.

J on G

It has been quite sometime since i followed J' s blog, i almost missed his talk at AVM hall in Chennai on G. Thanks to brother enthusiast RV, i didn't . The occasion was a Vallalar event hosted by a Trust of Pollachi N Mahalingam. Mahalingam's stamp was there everywhere- in the books displayed in the stalls and across the stage. J too started off his speech paying respects to Mahalingam. 

J started off in his typical sharp note, pointing out that History could be approached in two ways. one was the popular way mythifying and eulogising subjects, and the other was to clinically dissecting facts and presenting them. He was also quick to point out an example in what an earlier speaker had to say about the 'arutpa- marutpa' controversy and what the facts were as presented by Pa. Saravanan in his book  on the subject.

J said he was going to dissect the facts on Gandhi in his speech. But the way he veered off into describing how G bravely faced hostile crowds in Naokhali, he appeared to be doing the same eulogising and mythifying. J was after the question, so why arent people as passionate about G as they should be. Y dont people care about him and his ideals as much they even patronise a local or a regional leader? Y dont people defend G against his detractors? Y do they take everything granted about G?

J answered it stating that, it was because majority of the people found G against their 'basic nature'. He went on to describe the 'basic nature' of a group to consider itself pure and highly placed and to conceive an 'other' that is lowly and impure. It is the nature of the majority to draw their strength from denouncing and hating this 'other'. Given this 'basic need' for the other and the hatred involved, it was obviously a big problem to acknowledge a man who was even revered by his enemies. ( brings to mind the warm reception G receives in London and in Europe during his visit on the side lines of RTC. He was even warmly hosted by the mill workers whose livelihood were affected by G' denouncement of Foreign cloth, one of this worker would even visit him in Wardha- these images were flashing fresh in my mind as i had jus then seen the docu compiled by AKC. Also one of the prominent highlights of the movie were how the so called enemies were given a warm farewell and the almost absence of hatred when they were leaving our shores after Independence, all thanks to G's ahimsa )

Another aspect of this Basic nature was the tendency of uninhibited consumerism driving the majority of the people. It was this consumerism that was leading to one group exploiting the other. He opined that the present form of development has resulted in irreversible damages to the environment and cited a dialoge from the movie Matrix, where it is said that Human being was a virus killing the environment and itself in the name of development. He brought to light how some of the African nations were being exploited. G's model was self sustaining and inward looking . He pointed out how G's idea of reusing paper was a pioneer before the idea of recycling came. And infact reusing  was more efficient than recycling.

However neither G's idea nor his disciple J C Kumarappa's ideas found any takers in India. It took a Schumacher to study and give us Kumarappa's ideas in 'Small is beautiful'. He summarised that G fails us because of this 'basic nature'. and concluded saying that since the alternatives have failed, there was no way ahead but to turn to G for his ideas. 

J also did no forget to add that G wanted every one to find their own truth and that there was no 'one truth'. (This was again a strong import from the docu movie)

While J  denounced tendencies to generalise things and shrink them to a few core concepts, he himself showed those tendencies to generalise and capsulize ideas. These are some of the ironies J doesn't pause to ponder. 

On y people don't bother to defend G, i believe it is just like God is for believers. G is for those understand him, for others there is no point in defending him. 

After the talk, it was nice to catch up with him on a personal note. i was fascinated by his sharp memory reminiscing from what he had read ages ago from a story of Nagupoliyan