Wednesday, June 26, 2019

Between the Personal and the Performative

A chance meeting with the Kaarthiks while waiting in a Que for a ticket to watch a play at the ITFOK, Thrissur in 2018, and a bond that i had tended over watsapp and Facebook helped me secure an invitation for the Indian premiere of their film, 'His Father's voice' on 23/6/2019. I was hoping to see a hall packed with the glitterati of the dance community to celebrate the movie, that had among it's cast around ten popular dancers, all of them spectacular and much loved performers in the Bharatanatyam circuit.  But I could see only a handful of performers at the show i happened to attend. ( there were two other shows the same day, may be i missed them to the other shows )


I had been eagerly looking forward to this premiere,and had been following the news about the film ever since the first looks and trailers were shared on Facebook. It was thrilling to see the film open to raving reviews at its Hollywood premiere, and then  premiere at Malaysia before arriving in Chennai. To add to my excitement was Kaarthik's video journals, short videos posted on Facebook. These videos had brilliant visuals and equally enrapturing texts. 

The screening was at NFDC's premiere screening facility in the city, Tagore cinema,  inside Music college campus in RA puram. It was a quiet opening for an outstanding film. The version that we were being shown that day was a truncated 100 minute verson.

The film for most part is located at the serene home of the Kaarthiks, called Kaavadi, located near Pondicherry. The beauty and serenity of Kaavadi and the immaculate, charming grace of the lead actress Ashwini form the backbone of the movie. The film unfolds as a chain of beautiful visuals, accompanied by wonderful mix of carnatic and western music and dramatic segments of preformative lyrics and movements. 

The slips in the Plot

In the first few minutes, the viewer is let in on the central plot of a son in search of his father. The viewer also gets to know that the father is away on a journey and is expected back anytime. With these cards set out on the table, there is very little to hold the interest of the viewer. This probably is the weakest point of the movie. The viewer is left to munch in on the beautiful visuals as they unveil, and patiently wait for a twist or a turn that could get him hooked to the narrative. 

Yes,  few attempts are made at keeping the viewer interested, like opening out on why the Boy had to leave his father and quite later around the question of whether Parvathi had a role to play in the breaking up of the boy's parents. But somehow these potential suspenses fizzle out before they can build enough tension in the audience,  probably due to some misgiving in the way the sequences are being played out. The Director pans in and out between the present and the Past, and somewhere the steam fails to pile up enough pressure. 


On the other hand, there’s also the potentially interesting plot of a play that is taking shape within the movie. The characters are shown working on the conception and rehearsing the nuances of what should go into this play, and the film concludes with the staging of this play. Somewhere this potentially interesting plot is also squandered in the panning in and out of sequences. We are left with relishing glimpses of some brilliant and beautiful moments from the Ramayana being rehearsed to some enticing Bharatanatyam accompanied by Sanskrit poetry set to tantalizing music. 

In this context, Sanskrit being upheld as a Devabhasha, sounded a bit cliched. However, i start getting a feeling ( after watching Urubangam play and listening to a few renditions in this movie)  that Sanskrit does come across as the language best suited for theatre, and theatre is identified with the Devas in the Natyasastra and it is probably in this context that Sanskrit is touted as Devabasha.

Magical moments

Recounting some of the magical moments, Kris and Valli straying in on the rehearsals of the Characters of Janaka and Kousalya, played respectively by Masters of the art,  Balagopalan and Bragha Bassel, was a moment of lilting poetry. Kris and Valli, played respectively by Christopher and Sudharma, rehearsing the Lava and Chandraketu sequence is another flash of brilliance, but these end up being beautiful transient moments that just pass by the viewer without actually engaging him. 

The Director has done a brilliant job of getting these professional dancers to emote naturally for the camera. Ashwini, who plays Parvathi, aces it by looking completely at ease with camera, her presence on the screen is very graceful, composed and reassuring. Narendra, who plays Parvathi's husband fails to connect in some sequences, and aces it in the others. Christopher and Sudharma evoke a natural and friendly bond. It's a joy to watch their camaraderie reflect in the gentle professional competitiveness that's subtly visible in their trying to edge each other over in brilliance of performance. 
Kris and Valli

The actor playing Jon looks vulnerable in the scenes he appears without his little guitar. And in the scenes with the guitar he looks like a possessed person. The actor who plays Jon's wife has an air of easy wickedness about her. Thankfully, she is wicked only to the extent of wanting the best for her son, in this film. 

Fine Tunes and lines

Music is the throbbing soul of the film that keeps the spirit of this film together. The director has found his best foil in Vedant Bharadwaj in hitting the right mix of carnatic finesse and the breezy flow of western music. It would be an injustice to call this fusion, as the two distinct styles are treated in their natural plane and retain their distinct grace and spontaneity. The voices of Vedanth and Bindu Malini add zing and verve to the music. 

While JeremeyRoske's voice and Vedanth's guitar stand out in the 'fire and ice' song, 'Santana Tillana' is a beautiful coming together of Vedanth's breezy rendition of a thillana and Jeremy's tapping rendition. The marathi song brings to the fore Bindu malini's magic, while the Hemavathi song is a brilliant ground for Karthik's lines. 
Karthik, Ashwini and Vedanth pc: HFV

Kaarthik's lyrics works at different levels- at times they bring out the hidden emotions of the characters to the fore, and at others they play the guessing game with the viewer. Talking of enaging the viewer, Kaarthik's dialogues are truly a delicious aspect of the movie. It keeps lifting the narrative and the mood up whenever there is a tendency to sag. 

The dialogues keep reverberating across as the craft of an intelligent mind at work. Valli quizzing her parents about their attitude towards Jon was an interesting case in point. Karthik bounces question off at his characters to give us a feel of their mental make up. Whereas Parvathi's response reflects her maturity, her husband's response to Valli's quizzing reflects his attitude towards life. Kris' response on the bus to a stranger quizzing about his whereabouts reveals his temperament. There are few lines that so very perfectly fall in place that one takes a moment off to applaud the dialogue writer. There were also a couple of moments where the dialogues sounded a bit unnatural and oddly formal. 

There were a couple of moments when the director steers things clear without resorting to dialogues. For instance, Valli reassuring Kris, when he is down, with the roll of her eyes was a very cute gesture. But when it gets repeated on more than a couple of occasions it gets a bit odd.

Three pillars

For me, there were three things that lifted the spirits of the movie from sagging into a chain of brillinat sequences. The Hemavathi song with it's bordering on the ecstatic mood gives the movie it's first big push. The baby shower song brings in a new energy to the film with it's fresh perspective. and the final 'Fire and ice' song gives the movie a fitting close on a positive high.

The baby shower song also ends in a beautiful painting by Ashwini ( she graduated from JJ  school of arts), Mumbai), my favorite among the ones featured in the movie.There's a moment in the act of painting, when a stroke of paint on the canvas is captured at close up, revealing the beautiful texture of the canvas, transforming it for a magical moment into a dyed fabric. These are moments that reflect the deep love that the artist in Karthick has for his muse.

The setting of the movie is filled with aesthetically done spaces adorned with beautiful paintings and sculptures. A cute little Skanda easily wins hearts. It's also a reflection of the karthiks' spiritual sojourn that we see portraits of Ramanar prominently displayed, pointing to their preferences over the Aurobindo influence that is prominent in that region. Also not to forget the simple and appealing costumes.

This is a movie that needs to be celebrated by the dance and music community of Bharatanatyam performers and fans alike.And to the others, this movie could mean soulful music, brilliant visuals, interesting dialogues and an immersive experience in Bharatanatyam. 


Saturday, June 15, 2019

தியேட்டர் நிஷா- உருபங்கம் நாடகம்

தியேட்டர் நிஷா-  உருபங்கம் நாடகம்

தியேட்டர் நிஷா சென்னையில் இயங்கிவரும் நாடகக்  குழுக்களில் ஒன்று. இக்குழுவைப் பற்றி அறிமுகம் செய்யும் வேளையில், சென்னையில் இயங்கி வரும் பிற குழுக்களைப் பற்றியும்  ஒரு சிறு அறிமுகம் செய்ய இது ஒரு நல்ல தருணமென தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட தளத்தில், அதாவது தியேட்டர் நிஷா இயங்கும் தளத்தில் இயங்கும் பிற குழுக்கள் என் நான் கண்டும் கருதும் சில குழுக்களை மட்டும் இங்கே காணலாம்.

இக்குழுக்களை நான் 'காஸ்மோ' குழுக்கள் என்று அழைக்கிறேன். இவை தமிழ் மண்ணில் வேரூன்றி இருந்தாலும் இவற்றின் பார்வை, அழகியல்,  மற்றும் இயங்கு முறை உலகலாவியதாக உள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு அடையாளம் இருப்பதாக நான் கருதுகிறேன். துஷ்யந்த் குணசேகரின் கிரியா குழுவின் நாடங்களில் சிறந்த மேலாண்மை இருக்கும். இளையதலைமுறையின் ரசனைகளுக்கு தீனி போடும் விதமாகவும், அவர்களை சுண்டி இழுக்கும் அம்சங்கள் நிறைந்ததாகவும், வணிக நோக்கில் விளம்பரங்கள், பரப்புரைகள் என்ற சிறந்த கட்டைமைப்புடனும் கிரியாவின் நாடகங்கள் அரங்கேறுவது ஒரு தனிக்  கலை. மேலும் கிரியா, பல கல்வி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் என்றும், பிற குழுக்களுடன் கூட்டு முயசிற்ச்சிகள் என்று நாடகம் குறித்த ரசனையை, திறமையை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. ராஜிவ் கிருஷ்ணனின்  பெர்ச் குழுவின் நாடகங்கள் இலக்கிய அம்சங்கள் நிறைந்தவையாக, ஆழ்ந்த கருத்துக்களை  இலகுவான தளங்களில் பதித்து செல்பவையாகவும்  உள்ளன. மேஜிக் லன்டர்ன் குழுவினரின் நாடகங்கள் அனைத்து தொழில்நுட்ப வகையிலும் சிறந்த முறையில் செப்பனிடப்பட்டவையாக, ஒரு திரைப்படத்திற்குரிய  நேர்த்தியுடன் அமைந்தவை, நிகழ்த்து முறையில் பல சோதனைகளை தொடர்ந்து செய்துவரும் குழு இது. தியேட்டர் ஸிரோ வின் நாடகங்கள் நம்மை வயிறுகுலுங்க சிரிக்கவும், மனம் துளிர சிந்திக்கவும், நிகழ்த்துக்கலையின் சாத்தியங்களால் நம்மை மெய்மறக்கச்  செய்பவை. காஸ்மோ குழுக்களில் முன்னோடியென்று கருத்தக்கூடியவர்கள் மெட்ராஸ் ப்லயேர்ஸ். இவர்களது நாடகங்கள் ஒரு வித பிராட்வே அழகியலை மென்னுணர்வுகளைப் பறைசாற்றுவதாக இருக்கும்.

இந்த  காஸ்மோ தளத்தில், தியேட்டர் நிஷாவின் நாடகங்கள் சற்றே தீவிரத் தன்மை கொண்டவை. புராணங்கள் (பெரும்பாலும் வடமொழிப்  புராணங்கள்) மீதும் அவற்றின்  நாயகர்களின் காவியத்தன்மையை மிகைப்படுத்துவதன்  மீதும் பெரிதும் மோகம் கொண்ட குழு என்று கூறலாம். இந்திரா பார்த்தசாரதியின் அவ்ரங்கசீப் நாடகத்தை நிஷா குழுவினர் அரங்கேற்றிய போது பார்வையாளரின் மனம் பெரிதும் கதை மாந்தர்களின்  உருவாக்கத்தின்பால் லயித்தபடி இருக்கும், இதுவே இன்னொரு குழுவின் அரங்கேற்றத்தில் அந்த நாடகத்தில் சொல்லப்படும் அரசியல் கருத்துக்களின் பால் லயிக்கும்.
தியேட்டர் நிஷாவை தோற்றுவித்த பாலா அதன் முதுகெலும்பு என்றால் அவர் தோற்றி வளர்த்த இந்தக் குழுவின் இளம் நட்சத்திரங்களை இந்த உருபங்கம் நாடகம் மூலம் ஜொலிக்கக் கண்டது, மற்றும் இக்குழுவின் பிரதான அங்கமான சக்தி ரமணி இயக்குனராக மலர்ந்து ஜொலிக்கக் கண்டது இன்றைய நிகழ்வின் முத்தாய்ப்புகள்.

முதன்  முறையாக சக்தி ரமணியின் மேடைத் திறனை நான் நேர்காண முடிந்தது  ஒரு குருநாடக விழாவில், ( 2016 இல் என்று நினைவு )அவர் அரங்கேற்றிய, தீவிர உடல்அசைவுகள் மேலோங்கிய நிகழ்த்து பாணி நாடகத்தில் மூலம் தான். இன்றும் அந்த நிகழ்வதிர்வின்  நினைவுகள் ஒரு தகிக்கும் ஜோதியாய் என் மனதில் ஒளிர்விடுகிறது. அன்று முதல் அவரது செயல்பாடுகளைத்  தொடர்ந்து கவனித்த வண்ணம் இருந்துள்ளேன். இன்றவர் இயக்குனராக மலர்கிறார் என்ற செய்தி மிகுந்த ஆவலைத் தூண்டியது. முதல் நாள் முதல் கட்சியே பாஸாவின்  உருபாங்கம் மேடையேற்றத்தைப் பார்க்க சென்று விட்டேன்!

நாடகத்தின் களம் என்னவோ நிஷா குழுவினரின் வழமையான வடமொழிக் காவியம், நாயகனின் தீரத்தின் மிகைச் சித்திரமென்று விரிந்தாலும் சிறு சிறு புது உத்திகள் புது அனுபவத்தை தந்தன.
குறிப்பாக நாடகத்தின் தொடக்கத்திலிருந்தே ஒலிக்கத் தொடங்கும் விஷ்வா பரத்தின் தப்பொலி நாடகத்தின் ஒவ்வொரு கனத்தையும் மெருகேற்றியபடி கூடுதல் ஜீவன் சேர்த்தபடி வளர்கிறது.
விஷ்வா பரத்தின் நடனமைப்பு , ஒயிலாட்டத்தின் அசைவுகளை நினவுப் படுத்தின அவை நாடகத்தின் நிகழ்த்துமுறைக்கு கூடுதல் தீவிரத்தையும் தொடர்ந்து கவனத்தை ஈர்க்கும் ஒரு வேகத்தையும் தந்தன.

நான் கண்ட பிரதி காட்சியில் ஒளி அமைப்பு பல இடங்களில் சரிவர அமைக்கப்படவில்லை. பல நேரங்களில் நடிகர்கள் இருட்டில் நடிக்கும்படி ஆயிற்று .

நாடகத்தில் வடமொழி, தமிழ், ஆங்கிலம் என்று மூன்று மொழிகள் கையாளப் பட்டுள்ளன. அங்கிலத்தை தவிர்த்து தமிழையே ஆங்கிலப் பகுதிகளிலும் கையாண்டிருக்கலாம் . அது நாடகத்தின் உணர்ச்சி தீவிரத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கும் என்று தோன்றியது. ஆங்கில பிரயோகம் அந்த உணர்ச்சியோட்டத்தோடு சிறிதும் ஒட்டவில்லை.

 வடமொழி பிரயோகம், இசையோடும் , நிருத்தங்களோடும்  சிறப்பாக கை  கூடியுள்ளது இந்த நாடகத்தின் வெற்றிகளில் ஒன்று.

ஒவ்வொரு நடிகரும் தன் பங்கை மிகச் சிறப்பாக நிகழ்த்தியிருந்தார். எந்த ஒரு நடிகரைமட்டும் தனித்து குறிப்பிடுவது மிகவும் கடினம். துரியனாக பாலாவும், அஸ்வத்தாமாவாக சக்தியும் மிளிர்வதை குறிப்பிடாமல் விடுவதும் கடினம்.  அந்த அளவுக்கு ஒருவரை ஒருவர் மிஞ்சும் விதமாக சிறப்பாக நடித்திருந்தனர்.

இருப்பினும் ஓரிரு நட்சத்திரங்கள் அவை வானில் புதியன என்ற அளவிலும், அவற்றின்  தனி துடிப்பாலும்  கவனத்தை  ஈர்த்தன.

காட்சி அமைக்கப்பட்ட உடல் அசைவுகளுக்கு ஒரு நடிகரின் உடல் வாகு பொருந்தாத போதும், உடல் வாகு கை கொடுக்கத்  தவறியதை மனதின் தீரம், மற்றும் கீர்த்தியின் வலிமைக்  கொண்டு சமன் செய்து பிற நடிகர்களுடன் இணை செய்த ஒரு நடிகர் என் மனம் கவர்ந்தார்.
தால ஒலி தொடையில் தட்டி எழுப்ப வேண்டிய காட்சியில், ஒலி கூடுதல் வரும் பொருட்டு தன் தொடைமறைக்கும்  ஆடையை விலக்கி தாலம் தட்டி சீரொலி எழுப்பிய நடிகரின் ஈடுபாடும் பிரயத்தனமும் என்னை வெகுவாகக் கவர்ந்தன.
காந்தாரியின் வேடம் அணிந்தபெண்ணுக்கு அமைக்கப்பட்ட நீளமான துகில்களுடன் கூடிய நடன அமைப்பு ஒரு தனிச் சிறப்பு.

இந்தப் புதியவர்களின் பெயர் அறிய ஆவல் கொண்டு நாடக முடிவில் வழமையாகச் செய்யப்படும் கலைஞர்கள் அறிமுகத்திற்க்காக காத்திருந்தால்,
பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. நிஷா குழுவினர் இந்த வழமையைக் கைக்கொள்வதில்லையாம்!!
 இது தவறானது. புதுமை செய்கிறோம் என்று பார்வையாளர்களை இருட்டில் விட்டுவிடுகிறார்கள். கலைஞர்களின் அறிமுகத்துடன் மட்டுமே ஒரு நாடக நிகழ்வு முழுமைப் பெற முடியும். பாலா, சக்தி, மீரா போன்ற கலைஞர்களுக்கு அறிமுகம் தேவைப்படாது, ஆனால் புதியவர்களை அறிமுகம் செய்யாமல் விடுவது அவர்களுக்கு இழைக்கப்படும் ஒரு வித அநீதியாகத்  தோன்றுகிறது.

துரியனின் மனதை விளக்க முனையும் நாடகத்தின் ஆசிரியர் பாஸா , பாண்டவர்களையும் கிருஷ்ணனையும் தனி பாத்திரங்களாக படைக்கும் அவசியமில்லாமலே நாடகத்தில் அவர்களின் சுவடுகளை ஆழப் பதியச் செய்வது, ஆசிரியன் வெற்றி காணும் இடங்கள்.

தொடர்ந்து நல்ல காவியங்களையும், புதுக் திறமைகளையும் நமக்கு அறிமுகம் செய்யும் நிஷா குழுவினருக்கு வாழ்த்துக்கள். 

Wednesday, June 12, 2019

எழுத்தாளனைக் கொண்டாடுவது - 2

எழுத்தாளனைக் கொண்டாடுவது - 2

 சென்னையில் 8 ஜூன் 2019 அன்று பெருந்தேவியின் முன்னெடுப்பில் அரங்கேறிய பூமணியை வாசித்தல் என்ற ஒரு நாள் நிகழ்வை குறித்தும் அது என்னுள் கிளர்த்திய சிந்தனைகள் குறித்தும் இங்கே பகிர்ந்துட விழைகிறேன்.
சமீப காலமாக புத்தகங்களை ( நாவல்களை தான்... இது வரை ஆங்கில நாவல்களுக்கு தான் இந்த வாய்ப்புக்  கூடியுள்ளது .. Milkman வாசிப்பில் ஆழ்ந்த போது தொடங்கியது இந்த அரிப்பு ) வாசிக்கும் போது அருகே ஒரு தாளை வைத்துக்கொண்டு குறிப்புகள் எடுப்பது என்பது வாடிக்கையாகி உள்ளது. தமிழ் நாவல்களில் அதிலும் பூமணியின் எழுத்துப்பரப்பில் ஆழ்ந்தவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள நிச்சயம் ஏதும் இருக்கும் என்ற ஆவலில் இந்நிகழ்வை எதிர்நோக்கினேன். பெருந்தேவியின் ஆளுமையை நேரில் கண்டுணர வேண்டும் என்றும், மொழிப்பெயர்ப்பாளர்  கல்யாணராமன் அவர்களை சந்தித்திட வேண்டும் என்ற உப ஆவல்களுடன் வழக்கம்போல் இந்நிகழ்வுக்கும் நேரம் தாழ்ந்தே சென்றடைந்தேன்.. கல்யாணராமன் பேசி முடித்திருந்தார்..

நான் கேட்க்கும் வாய்ப்பு பெற்ற பெருந்தேவி, காசி மாரியப்பன், பெருமாள் முருகன், ராஜன்குறை ஆகியோரின் உரைகள் பெரிதும் அகாடெமிக் நெடியுடன் கூடியிருந்தன. ஒரு குறிப்பிட்ட கலர் கண்ணாடியை அணிந்துகொண்டு படைப்பை அந்த குறிப்பிட்ட பார்வையினூடே அலசுவது என்ற ஒரு சலிப்பூட்டும் அணுகுமுறையை தேர்ந்து கொண்டனர். இந்நிலையில் ஒவ்வொரு உரைக்கும் பின்னான கேள்வி பதில் நேரம் சற்று சுவாரசியமாகவும் உரையின் மீது மேலதிக வெளிச்சம் பாய்ச்சுவதாகவும் அமைந்தது. குறிப்பாக கல்யாணராமனின் கேள்விகள் சிறப்பான  குறுக்குவெட்டுகளாக அமைந்தன. அவரது நிதானித்த தெளிந்த பார்வையை புலப்படுத்தின.

பெருந்தேவி, பூமணியின் படைப்புகளில் அலைதல் என்ற ஒற்றைத்திரியை தேர்ந்துகொண்டார். அவரது உரை அலைதலின் அழகியல் என்ற ஒற்றை இழையை மிகவும் சுவாரஸ்யமாகவே பதிவு செய்திருந்தது. அனால் உரையின் முடிவில் கல்யாணராமன், அலைதலினால் உண்டாகும் நிச்சயமின்மை முதலிய இடர்களை சுட்டியபோது தான் பெருந்தேவி உரையில் இருந்த மிகப்பெரிய வெற்றிடம் புலப்பட்டது. பெருந்தேவி அலைதலின் அழகியல் என்ற ஒற்றை பரிமாணத்தை மட்டும் romanticise செய்து உள்ளது விளங்கியது. இது போன்ற கல்விப்புலன்சார் கட்டுரை நோக்குகளில் உள்ள பெரும் குறையும் வெளிப்பட்டது. பெருந்தேவியின் உறையினூடே 'கொம்மை' நாவல் பற்றிய பகுதிகள் இந்நாவலின் கிராபிக் சாத்தியக்கூறுகளை மனக்கண் முன் நிகழ்த்திக் காட்டின.

பெருமாள் முருகன் எழுப்பிய 'பொருள்வகை முரண்' யாருக்கும் புரிந்ததாகத் தெரியவில்லை. ஒன்று மட்டும் விளங்கியது,அதாவது மார்க்சிய எழுத்தாளர்கள் தங்கள் கதை சொல்லும் நீதியை தனியே கதையின் முடிவில் எடுத்துரைக்கும் வழக்கம் கொண்டிருந்தனர் ஆனால் பூமணி இந்த வழக்கத்தை பின் பற்றவில்லை, மாறாக பூமணி கதையின் மைய ஓட்டத்தின் நடுவிலேயே தனது நீதிகளை பதிந்து விடுவார் என்றார் பெருமாள் முருகன்.

காசி மாரியப்பனின் உரை, பூமணி படைப்புகளில் 'வெளி' என்ற சங்கம் தொட்டு தொடரும் ஒரு ஆய்வுப்பார்வையின் வழியே விரிந்தமைந்தது. அவரது உரையின் முடிவில் பெருந்தேவி எழுப்பிய , அதென்ன அகம் என்றால் பெண்ணுக்கும் புறம் ஆணுக்கும் என்ற நியதி என்ற கேள்வி 'வெளி' என்னும் தளத்தின் மீது ஒரு புதிய பெண்ணிய வெளிச்சத்தை பாய்ச்சியது.

ஒவ்வொரு கேள்வி நேரத்தின் போதும் யவனிகா, பூமணியின் படைப்புகளில் ஜாதி வெளியின் சித்தரிப்பு பற்றி, தொடர்ந்து கேள்வி எழுப்பியபடி இருந்தார்.

ராஜன்குறை தனது உரையில் பூமணியின் படைப்புகள்  அன்றாடம், வரலாறு என்ற இரு வெளியினூடே எப்படி விரிகின்றன என்று விரித்துரைத்தார். அவரது உரை கேட்டு உடனே மனதில் பதிந்து விடும் விதமாக இல்லை. இது போன்ற உரைகள் முன்னரே பதிப்பித்து ஒரு பிரதியை பார்வையாளர்களிடம் தந்தால் மட்டுமே அவற்றை குறித்து ஒரு உரையாடல் உருவாக முடியும்.

ஸ்டாலின் ராஜாங்கத்தின் உரை மிக சிறப்பாக பூமணியின் படைப்புகள் எவ்வாறு அந்தந்த காலத்தின் மாறிவரும் அரசியல்  தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ளது என்பதை அஞ்ஞாடிக்கு முன்னான இரு நாவல்களின் வழி அழகாக எடுத்துரைத்தார். 'பிறகு' நாவல் 60களின் பெருங்கனவுகளின் சாத்தியங்களையும் ; 'வெக்கை ' 70களில் வளர்ந்து வந்து நக்சல் முதலிய அதிருப்தி பிரிவினரின் அரசியலையும் பதிவு செய்துள்ளதை உரையில் எடுத்துரைத்தார்.

 வழக்கம் போல் கேள்வி நேரத்தில் இவரிடத்திலும் ஏன் பூமணியின் படைப்புகளில் ஜாதிய சித்தரிப்புகள் மறைக்கப்பட்டுள்ளன என்ற கேள்வி எழுந்தது. இதை ஸ்டாலின் அவர் வகுத்த பார்வையினூடாகவே சிறப்பாக அணுகியிருக்கலாம் என்று தோன்றியது. அதாவது 90களில் இருந்தே ஜாதி அரசியலில் பிரதானம் பெறுகிறது அதற்க்கு முந்தைய அரசியலில் அப்படியில்லை , அது போலவே பூமணியின் அஞ்ஞாடியில் ஜாதி சித்தரிப்புகள் மேலோங்கி நிற்கின்றன அதற்க்கு முந்தைய நாவல்களில் அப்படி இல்லை என்றொரு விளக்கம் எனக்கு ( ஸ்டாலினின் உரையின் மூலம்) தோன்றியது.

தனது ஏற்புரையில், இது போன்ற ஒரு நிகழ்வை சாத்தியப் படுத்த அயல்நாட்டில் வசிக்கும் ஒரு பெண் வரவேண்டியிருக்கிறது என்ற நிலையை நொந்து கொண்டார். தனது நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு கண்டிட நாற்பது வருடங்கள் காத்திருக்க வேண்டியதை சுட்டி நொந்து கொண்டார். தனது ஏற்புரையை சுருங்க முடித்துக்கொண்டு கேள்விகளை வரவேற்றார். தான் தலித் எழுத்தாளன் என்ற அடையாளத்தை முற்றிலும் மறுப்பதாக தெளிவுப் படுத்தினார். பி கேசவதேவின் அண்டை வீட்டார் தனக்கு பிடித்த நாவல் என்று கூறினார். பூமணி கருவேலம் பூக்கள் என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பது கேள்வி நேரத்தின் போதே எனக்கு புலனாயிற்று (இந்த திரை அனுபவத்தைப் பற்றியோ அவரது மொழிபெயர்ப்பு பணி பற்றியோ உரைகள் இல்லாதது இந்நிகழ்வின் ஒரு குறை) . மேலும் அவரது வெக்கை திரைப்படமாகிறது என்றும் அறிந்தோம்.

நிகழ்வின் தொடரிழையாக ஓடிய கேள்வி பூமணியிடமும் கேட்கப்பட்டது. black literature , black music போன்ற வகைமைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், பூமணி  ஏன் தலித் இலக்கியம் என்ற ஒன்றை ஏற்க மறுக்கிறார் என்று 'பேட்டை' தமிழ் பிரபா கேட்டார். இதற்க்கு, தலித் என்று ஒரு அடையாளமே கிடையாது, அது அரசியல்வாதிகள் உருவாக்கிய ஒரு மாயை என்று தான் கருதுவதாக பூமணி விளக்கினார்.

தட்டையான அகடெமிக் கட்டுரைகளே என்றாலும் துளைத்தெடுக்கும் கேள்விகள் மூலம் இந்நிகழ்வு ஒரு சிறந்த அனுபவத்தை ஏற்படுத்தியது. முந்தைய நிகழ்வு போன்று இங்கும் பெருந்தேவி தன்னை முன்னிறுத்திக் கொள்வதில்லை என்பதில்  அதிக கவனத்துடன் செயல்பட்டது குறிப்பிடத் தக்கது.

எழுத்தாளனைக் கொண்டாடுவது - 1

எழுத்தாளனைக்  கொண்டாடுவது- 1

சமீபத்தில் நடந்தேறிய, நான் பங்கு கொள்ளும் பாக்கியம் பெற்ற  இரு நிகழ்வுகள் மனதுக்கு மிகவும் இனியனவாகவும் , நாளெல்லாம் அமர்ந்து திளைக்கும்படியும் , தமிழ் இலக்கியம் குறித்த ஆரோக்கியமான அதிர்வுகளாகவும் அமைந்திருந்தன. அவற்றைப் பற்றி இங்கே விரித்திட விழைகிறேன்.

இவை இரண்டுமே எந்த ஒரு அமைப்பு ரீதியாக இல்லாமல், வாசகர்களின் முன்னெடுப்பால்  நிகழ்ந்தவை என்பது ஒரு சிறப்பு, அதிலும் இரு நிகழ்வையும் முன்னின்று ஒருங்கமைத்து அரங்கேற்றியது பெண்கள் என்பது கூடுதல் சிறப்பு. ஒன்று லாவண்யா சுந்தர்ராஜன் முன்னெடுப்பில்  கோவையில், ஏப்ரல் 20 2019 அன்று ஒருங்கமைக்கப்பட்ட  'எழுத்தும்  எண்ணமும்' என்ற எம் கோபாலகிருஷ்ணனின் படைப்புகளைக் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு. ஒரு ஜொலிக்கும் நட்சத்திர எழுத்தாள பட்டாளத்தையே இந்நிகழ்வில் அணிவகுக்கச் செய்தது மனதுக்கு மிகவும் இனிமையாக அமைந்தது. அணிவகுப்பு குறித்த விவரங்களை  அரங்கின் அழைப்பிதழை கண்ணுற்று இன்புறுக. இது போதாதென்று நிகழ்வை சிறப்பிக்க பார்வையாளர்களாக வந்து அமர்ந்து நிகழ்வை ரசித்து களித்த ஜெயமோகன் மற்றும் பி ஏ கிருஷ்ணன் ஆகியோரது வருகை நிகழ்வுக்கு இன்னும் சுவை கூட்டியது . கோணங்கள் ஆனந்த் முதலியோருடன் கண்டு உரையாட அமைந்த வாய்ப்பு மேலும் சிறப்பு.


நிகழ்வுக்கு தாமதமாக சென்ற காரணத்தால் பெரிதும் ஆவலுடன் எதிர்நோக்கிய சுகுமாரன் மற்றும் யூமாவின் உரைகளை தவற விட்டுவிட்டேன். மொழியாக்கங்கள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள், நாவல்கள் என்று M G யின் இலக்கிய செயல்பாடுகளை முழுமையாக அலசும் வகையில் தனி தனி அமர்வுகளாக அமைந்தது ஒருங்கமைப்பின் சிறப்பு. மேலும் ஒவ்வொரு அமரவும் குறிப்பிட்டிருந்த நேரப்படி தொடங்கி நிறைவுடன் முடிந்தது கூடுதல் சிறப்பு.





MG யின் எழுத்துக்களை ஒரு அறிமுகம் செய்து கொள்ளும் விதமாக அவரது முனிமேடு சிறுகதை தொகுப்பில் இருந்து ஓரிரு கதைகளை படித்து விட்டு சென்றிருந்தேன். எனக்கு அந்த கதைகளில் பெரிதாக லயிப்பு ஏற்படவில்லை. மேலதிக வர்ணனைகளால் ஒரு வித திகட்டும் ஒரு எழுச்சியோ சோதனைகளோ ( அதற்கான வாய்ப்புகள் இருந்தும்) நிகழாத ஒரு தட்டையான களமாக தோன்றியது. அந்த தொகுப்பின் முன்னுரையில் தேவதேவன் சிலாகித்திருந்தது நான் மெய்யுணர முடியா மிகையாக தோன்றியது.

ஆனால் சிறுகதை அமர்வில் இந்த தொகுப்பைப் பற்றி பேசிய கந்த சுப்பிரமணியம் அவர்களின் உரை , கதைகளை சிலாகித்து எடுத்துரைத்த முறை என்னை மீண்டும் வாசிக்க செய்ய தூண்டின. நினைவில் நின்ற கவிதைகள் என்று MG கவிதைகள் வாசிப்பு அறிமுகம் செய்யும் விதமாக எழுதியுள்ள நூல் குறித்து மகுடேஸ்வரனின் உரை மூலம்  அறிந்துகொண்டது ஆர்வத்தை தூண்டியது.
மகுடேஸ்வரன், மோகனரங்கன், நாஞ்சில், பாவண்ணன், சு வே  முதலியோர் பேசும் போது MG உடனான அவர்களது நீண்ட மற்றும் ஆழ்ந்த நட்பு மேலோங்கி வியக்கச் செய்தது. பலரது நினைவு கூறல்களின் வழியே அண்ணாச்சி என்ற தமிழினி வசந்தகுமார் பற்றிய ஒரு சித்திரம் பின்புலத்தில் தொடர்ந்து வளர்ந்தபடி இருந்தது.

MG தனது ஏற்ப்புரையில் சொல்வனம் இதழுக்காக ஜெயமோகனுடன் பணியாற்றியது தனது எழுத்து பயணத்தில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டார். 90 களில் திருப்பூர் அருகே ஒருங்கமைக்கப்பட்ட எழுத்தாளர்கள் முகாம் ஒன்றில் ஜெயமோகன், நாஞ்சில், பாவண்ணன் முதலியோருடன் உண்டான அறிமுகம் பற்றி அவர் அவர் உரைகளில் தனித்தனியே குறிப்பிட்டனர்.
MG யின் கதைகளில் பெண்கள் மற்றும் அவர்களது எண்ண ஓட்டங்களை மிக தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளதை தனிச்சிறப்பம்சமாக அனைவருமே எடுத்துக்காட்டினார்கள் , அந்த அம்சம்  தான் வளர்ந்த கைத்தறி நெசவாளர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியில், அவ்வீட்டு பெண்களின் சம்பாஷணைகளை அதிகம்  கேட்டு வளர்ந்த வாய்ப்பு அமைந்ததால் இருக்கலாம் என்று MG தெளிவு படுத்தினார்.
MG யின் காமம் குறித்த சித்தரிப்புகள் விரசங்கள் இல்லாமல் இலக்கிய அமைதியுடன் அமைந்த பாங்கை அனைவருமே பாராட்டினர்.

கொஞ்சம் கறாரான விமர்சன உரைகளுக்கு பெயர் பெற்ற K N செந்தில், ஏனோ இந்நிகழ்வில் மிகவும் தட்டையாக எந்த ஊக்கமும் உற்சாகமும்   இன்றி உரையை வாசித்ததாக தோன்றியது. நான் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழினி மின்னிதழ் ஆசிரியர் கோகுலின் உரையும் ஏமாற்றும் விதமாக அமைந்தது. கோகுல் தான் படித்துக்கொண்டிருக்கும் நிக்கோலே தலெப் இன் அளவுகோலின் படி எப்படி மணல்கடிகை ஒரு சிறந்த நாவல் என்று தான் அறிவதாக கூறி அமைந்து விட்டது சற்று ஏமாற்றம் தருவதாக இருந்தது. ஆனால் கோகுல் முன்வைத்த தலேபின் அளவுகோலை கோகுலின் பின் பேச வந்த அனைவரும் ஏற்றுக் கொண்டு உரையில் புகுத்தியது எனக்கு வியப்பூட்டியது.


நிகழ்வுக்கு வருகை தந்திருந்தவர்களுக்கு உணவு பரிமாறியது மிகவும் கனிவான ஒரு அம்சம். உணவு இடைவேளைக்குப்  பின் ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் MG யின் சில சிறுகதைகளை நாடகங்களாக அரங்கேற்றினர். இரு மாணவர்கள்- கட்டியக்காரன் போன்ற பாத்திரத்தில் தோன்றிய ஒரு நடிகனும், பள்ளி சிறுமி வேடத்தில் தோன்றிய ஒரு நடிகையும் சிறப்பாக நடித்திருந்தனர், காட்சியை தங்கள் தோள்களில் உயர்த்தி பிடித்தனர்.

ஒரு எழுத்தாளனுக்கு விருதுகளை விட இதுபோன்ற அவன் படைப்புகளை சக எழுத்தாளர்களால் விரிவாக பேசப்படும், கொண்டாடும்  நிகழ்வுகள் பன்மடங்கு நிறைவையும் மகிழ்ச்சியையும் தரும் என்ற கருத்தை என் மனதில் ஆழமாக விதைத்த அழகான நிகழ்வு இது.

நிகழ்வை சிறப்பாக ஒருங்கமைப்பதில் முன்னின்ற லாவண்யா ஏனோ தன்னை முன்னிறுத்திக்கொள்வதில்லை என்பதில் மிகவும் அதிகவனத்துடன் இருந்தார் என்பது ஒரு உறுத்தலாக இருந்தது.. வெகு சுலபத்தில்  அகந்தைகள் பெருத்து உரசிக்கொண்டு குழுக்களாக உடைந்து சிதறிவிடும் தமிழ் இலக்கிய உலகில் இதுபோன்று அதிகவனத்துடன் செயல்படுவது அவசியமாகிறது என்று தோன்றுகிறது.

குறிப்பு : படங்கள் லாவண்யா சுந்தரராஜன் facebook பக்கத்தில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன .