Saturday, December 14, 2013

எதிர்வினைகள்

மா போ சி நூல்கள் விழாவில் ஜெ மற்றும் ராஜேந்திரசோழனின் உரைகளை கேட்க்கும் போது மனம் தொடர்ந்து எதிர்வினைகளை  கொப்பளித்துக்கொண்டே இருந்தது.
ஜெ பேசும் போது, மா போ சி இன் சிலம்பு தேர்வு ( குறளும் , கம்பராமாயனமும் பரவலாக பேசப்பட்டிருந்த காலத்தில்), பாரதி சார்ப்பு ஆகியவற்றிற்கு மிக நுண்ணிய (reading too much into it ) காரணங்களை கற்பிப்பதாக தோன்றியது. கமபராமாயணம் பற்றி பேசினால் மதச்சாயம் பூசி விடுவார்கள், congress இன் secular image உடன் ஒட்டாது என்னும் சிம்பிள் காரணம் போதாதா, சிலம்பு தேர்வுக்கு.
குஜராத்திய வட்டார இலக்கிய வளர்ச்சிக்கு காந்தி வித்தாக அமைந்த சூழலை ஒரு குற்றம் சாட்டும் தொனியில் இருந்ததாகப்பட்டது . எவர் ஒருவருமே தன் தாய்மொழி செழிக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பே அல்லவா.
மா போ சி ஒரு சிந்தனையாளரோ ஆய்வாளரோ அல்ல ஒரு கொள்கைப்பரப்பாலரே என்று முடிவு செய்தது அவரை சற்று தரம் தாழ்த்தும் தொணியில் அமைந்தது. He could have put it differently.

இராஜேந்திர சோழன் பேசும் போது, ஒரு சமுகத்தில் எப்படி கருத்தாக்கங்களும் பெரும்பான்மை சக்திகளால் உருவாக்கப்படுகின்றன, தினிக்கப்படுகின்றன என்பதை முன்வைத்தார். இந்த பின்னணியில் 'தேசியம்' குறித்த ஆக்கங்களை சாடினார். வரலாற்றில் இந்தியா எப்பொழுதும் ஒரு தேசமாக இருந்ததில்லை என்பதை ஒரு காரணமாக முன்வைத்தார்.
இதை சாடுகிறவர் மொழி சார் தேசியத்தை ஆதரிக்கிறார்  போற்றுகிறார். இது எனக்கு முரணாக  தோன்றியது. இதை நான் அவரிடமும் எடுத்துக்கூரிய போது அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

அரசியலமைப்பு சட்டத்தில், 'the governor shall appoint the chief minister' என்ற கூற்றை தனித்து நோக்கி அதற்க்குள் 'centre ' இன் ஆதிக்க வழிமுறை  என்று அர்த்தம் கற்பித்தார். இதில் உள்ள அபத்தத்தை அவரிடம் எடுத்து கூறினேன். அவர் கேட்கும் மனதில் இல்லை. அவர் ஆழ நோக்கவேண்டும் என்று கூறும் அதே தருணத்தில் 'over simplify' செய்வதாக தோன்றியது.



No comments: